Wednesday, November 4, 2020

Skin whitening

                         Skin whitening.



Is it ugly to be dusky?Is there a law that if you are dusky you should try repeatedly to lighten your skin colour?The funniest thing is that people also search "how to lighten your skin overnight".So they want to whiten thier skin faster.White isn't the only beautifull colour in the world.When you see the skin of beauties that is dusky skin girls they tend to have clear skin.Dusky is also beautifull and white is also beautifull.Inferiority complex is the main thing that all face.Don't feel inferior among yourself.Hope found this article usefull.
















Wednesday, April 7, 2010

மதமும்! மாற்றமும்!

"எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மாட்டீங்களா?" ன்னு என் வீட்டுக்காரி கேட்டாலும் என்னால முடியல...

சரி, எவ்வளவோ பேரு சொல்லி இருக்காங்க, மதம் என்பது மனிதனை அழிக்க வந்த ஒரு பெரிய ஆயுதம் என்று. அது உண்மை என்று புரிந்து கொண்டேன். ஆனால், மதம் எப்படி வந்தது என்று இன்னும் எனக்குத் தெரியாமல்தான் உள்ளது!

எனக்குத் தெரிந்த மதம் இதுதான்.

மத மாற்றம் பற்றி, எவ்வளவோ பேர் எழுதி இருக்காங்க. ஆனால், இது முழுக்க முழுக்க என்னுடைய சிந்தனைகள், யாரும் வருத்தத்படுவதற்காக நான் இதை எழுதவில்லை.

மதம் மாறுபவன் மனிதனே இல்லை என்று யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. சற்றே உற்று நோக்கினால், உண்மையில் என்ன நடக்கின்றது என்று விளங்கும்.

மதம் மாறவேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை. மற்றவர்கள் மதம் மாறக்கூடாது என்று அதிகமானோர் நினைக்கின்றனர். காரணம் அவர்கள் சார்ந்துள்ள மதம், அதனால் அவர்களுக்கு பிடித்துள்ள மதம்!

சரி, யார் யார் மதம் மாறுகின்றார்கள்? மிகவும் வறுமையில் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

அப்படிப்பட்ட நேரத்தில், நான் சென்று உனக்கு 3 வேளை பிரியாணி மற்றும் அடுத்த 2 மாதங்களுக்கு சாப்பாட்டுக்குப் பணம் என்றால், என்ன சொன்னாலும் செய்வார்கள்.

அதுதான் நடக்கின்றது. நான் நேரில் கண்ட ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறுகின்றேன்.

திருச்சியில், என் வீட்டிற்குப் பக்கத்தில் வசித்த ஒருவருக்கு ரேஷன் கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அதற்குப் பணம் தேவைப் பட்டது. யாரும் கொடுத்து உதவ முன்வரவில்லை.

அந்த வேளையில், ஒரு சிலர், செல்வராஜுக்கு அவர்களது மதத்தைப் பற்றியும், மாறினால் ஏற்படும் மாற்றங்களையும் எடுத்துக்கூறி, செல்வராஜுவை அந்த மதத்துக்கு மாற்றிவிட்டனர். பணமும் கொடுத்து, ஒரு சலவை செய்யும் எந்திரமும் வாங்கி கொடுத்துள்ளனர்.

அவர் அதிகாரபூர்வமாக மதம் மாறியதன் விளைவு, அவருக்கு அரசாங்க வேலை இல்லை (இட ஒதுக்கீட்டின்படி). ஆனால், தற்போது, அவர் அந்த கடையை வைத்து பிழைப்பை நடத்துகின்றார்.

இந்நிலையில் நான் கேட்பதெல்லாம், அவர் செய்தது சரியா, தவறா?

இந்த நிகழ்வில் என்ன தவறு உள்ளது?

மதம் மாறக்கூடாது என்று சொல்லும் ஒரு சாரார், அந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு என்ன செய்கிறார்கள்?

இன்னும் மக்களை அடிமைகளாக வைத்து, அவன் சாகும்வரை, இரத்தத்தை உறிஞ்ச நினைக்கின்றார்களே தவிற, மற்றது ஒன்றும் இல்லை.

சரி, மதம் மாறிய பின்பு, அவன் என்ன உடை உடுத்தினால் என்ன? அல்லது என்ன உணவு உண்டால்தான் என்ன?

கொலை, கொள்ளை இன்றி, யாரையும் ஏமாற்றாமல் இருந்தால் அவன் எந்த மதத்திற்கு மாறினால் என்ன?

சரி, இவுங்கள ரொம்ப நல்லவங்களாவே சொல்லிகிட்டு இருந்தா எப்படி?

இவங்களுக்கெல்லாம் ஒரே கேள்விதான்.

எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாவது, ஒரு பிச்சைக்காரனை, மதம் மாற்றியிருக்கின்றார்களா??


Friday, March 26, 2010

அரசு நிறுவனமும் 1500 கோடி வரி ஏய்ப்பும்!

... என்னத்தங்க சொல்றது? ஒரு பக்கம் வரி கட்டியே சம்பளத்துல பாதி வருவாயை தொலைத்துக்கொண்டிருக்கும் மென்பொருள் பொறியியல் வல்லுனர்கள்!

இன்னொரு பக்கம், வரி கட்டுங்கள்னு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பன்னிட்டு, வரி கட்டாம, வருமான வரித்துறையினர் சோதனையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் சினிமாக் காரங்க.

தேர்தல் வரும்போது, என்னுடைய வருமானம் 10 கோடி, 100 கோடி, 1000 கோடி என்று சொன்னாலும், அவர்கள் என்றைக்காவது வரி கட்டினார்களா என்று கேட்க முடியாத இடத்தில் இருக்கும் அரசியல் வாதிகள்... வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள்.

2 நாளைக்கு முன்னாடி, பெங்களூர் உயர்நீதி மன்றத்துல ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதப்பத்திதாங்க இப்போ பேசப் போறோம்.

எச். ஏ. எல் (HAL - Hindustan Aeronautical Limited) என்ற நிறுவனம் 2005 ம் ஆண்டு வரைக்கும் கட்ட வேண்டிய வணிக வரி ரூ. 1553 கோடியை கட்டவில்லை. கர்நாடக அரசு, அந்நிறுவனத்திற்குப் பிறப்பித்த ஆணையில், வரியை உடனே கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதை எதிர்த்து, அந்நிறுவனத்தின் சார்பில், பெங்களூர் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பையும் எதிர்த்து, மேல் முறையீடு செய்தனர் அந்நிறுவனத்தினர். மேல்முறையீட்டுக்கான காரணம்: இது ஒரு அரசு நிறுவனம் என்றும், இங்கு அரசுக்காக பணிகள் நடப்பதாகவும், அதனால் வரி விலக்கு அளிக்க வேண்டுமென்றும் கோரியது.

ஆனால், உண்மையில், அரசுக்கு செய்யும் சேவையை விட, தனியாருக்குதான் அதிகமான, தரமான சேவை செய்ததாகவும், ஆகையால், இந்நிறுவனம், வரி விலக்குக்கு தகுதியற்றது என்றும் நீதிமன்றம் கருதி, மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்து, உரிய வரியை இன்னும் ஒரு வார காலத்தில் கட்டவேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

என்னோட மண்டைக்கு புரியாத ஒன்று என்னவென்றால், 2005 வரைக்கும் கட்ட வேண்டிய ரூ. 1500 கோடி என்னவானது? ஏன் கட்ட மறுக்கின்றனர்.

அரசு நிறுவனம் என்பதால், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரிப்பணத்தில் கூட யாரேனும் "கை" வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் வலுவாக எழுகின்றது.

தினசரி, அமெரிக்க கலாச்சாரத்தைப் படிக்கவும், அதை செய்முறை செய்து பார்க்கவுமே (உச்ச நீதிமன்றமே, குற்றமில்லைனு சொல்லிடிச்சு! ) நேரமில்லாமல் போன நமக்கு... இதையெல்லாம் பற்றி சிந்திக்க நேரமேது? காலத்தின் கட்டாயம் நாம் கண்டிப்பாக எதையோ இழந்து வருகின்றோம் என்ற அச்சம் மட்டுமே மிஞ்சி காணப்படுகின்றது.

நன்றி: தினத்தந்தி

யார் குற்றம் என்ற பகுதியில் அடுத்து சந்திக்கலாம்.

Tuesday, October 6, 2009

மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்

"இந்த சாஃப்ட்வேர் பசங்க வந்தாலும் வந்தானுங்க, எல்லா விலை வாசிகளும் ஏறிப்போச்சு, என்னைக்குத்தான் விடிய போகுதோ?!" இதுதான் இந்தியாவின் எந்த மூலையிலும் ஒலிக்கக்கூடியதாக இருக்கின்றது, 1994 முதல்.

இப்படிக்கூறுபவர்கள் யார்? இங்க வாங்க...

Saturday, September 5, 2009

வைதீஸ்வரன் கோயிலும் வயித்தெறிச்சலும்!

நான், ஓவரா சாமி கும்பிடாதீங்க அப்படின்னா, நீங்க கேப்பீங்களா? பெரியார் சொன்னதையே நாங்க கேக்கல, இவரு வந்துட்டாரு ... அப்படின்னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணிட்டு போயிடுவீங்க... இருந்தாலும் நடந்ததை சொல்றேங்க... மேலும் படிக்க..

Monday, August 10, 2009

நடந்தது என்ன?

ஆரம்பத்துல இருந்தே சொல்லிகிட்டு இருந்தேன், இந்த முறை முயற்சி, அடுத்த முறை வெற்றின்னு. அதே மாதிரி, இந்த முறை நடந்த, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commssion) குரூப் -1 (Group I Services) என்கின்ற பணியின் முதன்மைத் தேர்வில் (Prelims) நான் தோற்றுவிட்டேன்.

சற்றே நிமிர்ந்தும், குணிந்தும், நடந்தும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து சிந்தித்துப் பார்த்தேன். நடந்தது என்ன? என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

இதுதான் நடந்தது...

ஆரம்பத்தில் இருந்த ஆர்வம், வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. பல்வேறு சூழல்கள், பயணங்கள், பணிகள் என்று காரணங்கள் பலவற்றை குறிப்பிட்டாக வேண்டும்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது இதுதான்,

1. 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை (கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல்) நன்றாக படித்து தெளிவாக வேண்டும்

2. தினமும் வரும் முக்கியமான செய்திகளை படித்து, அதை குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்

3. தொலைக் காட்சி அல்லது தமிழில் தினமனி போன்ற ஊடகங்களை தினமும் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டும்

4. தமிழில் இலக்கியங்கள், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அவரது படைப்புகளை நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்

5. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) சாராம்சங்களையும், அதில் உள்ள பிரிவுகளையும் (Articles) நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்

6. இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் (Census) முறைகள், சென்ற முறை கணக்கெடுப்பின்படி உள்ள புள்ளியல் விவரங்களை தொகுத்து வைத்துப் படித்து தெளிதல் வேண்டும்.

7. இந்தியாவில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பற்றிய புள்ளி விவரங்களை தொகுத்து வைத்து படித்து தெளிதல் அவசியம்

8. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள், அவற்றில் வெற்றி பெற்றவர்கள் விவரங்களையும் தெளிந்து தெரிதல் வேண்டும்.

9. இடைத் தேர்தல்கள் பற்றிய விவரங்களை அறிந்திருக்க வேண்டும்.

10. துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் விவரங்கள், துறையின் தலைவர்கள், விசாரணைக் குழுக்கள், அவற்றின் உறுப்பினர்கள், முடிவுகள்.

மேற்கண்ட அனைத்தையும் செய்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், வெகு சில விவரங்களையே சேகரித்து வைத்துக் கொண்டு தேர்வை சந்தித்தேன்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எந்த தேர்வு எழுத விரும்பினாலும், மேற்கண்ட 10 விவரங்களை அடிப்படையாக வைத்துக் கொள்ளவும். இதைத் தவிர்த்து கேள்விகள் வர முடியாது. வராது.


அடுத்த ஆண்டிற்கான தேர்வு அறிவிப்பு வரும் நவம்பர் மாத அளவில் வெளி வரும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் (http://tnpsc.gov.in/recruitment.htm) இதற்கான அறிவிப்பு இருக்கும்.

மேலும் விவரம் அறிய பின்னூட்டுங்கள்!

Friday, May 22, 2009

பெருமைக்குரியவர்கள் ...

காபி அண்ட் பேஸ்ட் வேண்டாம்னுதான் இப்படி ஒரு விளம்பரம்!

http://mokkai-sangam.blogspot.com/2009/05/blog-post.html

-தமிழ்